என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணமேடையில் வாளால் ‘கேக்’ வெட்டிய புதுமண தம்பதி - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சி
Byமாலை மலர்28 Jan 2020 9:24 AM GMT (Updated: 28 Jan 2020 9:24 AM GMT)
பூந்தமல்லி அருகே மணமேடையில் புதுமணத் தம்பதி வாளால் கேக் வெட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பூந்தமல்லி:
மாங்காடு அருகே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரபல ரவுடி பினு தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் வாளால் கேக் வெட்டி கொண்டாடினான்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ரவுடி பினு மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.
ரவுடி பினு ஸ்டைலில் அரிவாளால் கேக் வெட்டும் சம்பவம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மணமேடையில் புதுமணத் தம்பதி வாளால் கேக் வெட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பின்னர் மணமக்கள் வாளை வாங்கி கேக் வெட்டுகின்றனர். அப்போது மேடையில் நிற்கும் வாலிபர் ஒருவரும் நீண்ட வாளை கையில் வைத்தபடி உற்சாகத்தில் கூச்சலிடுகிறார்.
இதுபற்றி போலீசாருக்கும் புகார் வந்துள்ளது. வாளால் கேக் வெட்டிய புதுமணத் தம்பதி மற்றும் அவர்களது நண்பர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.
மாங்காடு அருகே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரபல ரவுடி பினு தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் வாளால் கேக் வெட்டி கொண்டாடினான்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ரவுடி பினு மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.
ரவுடி பினு ஸ்டைலில் அரிவாளால் கேக் வெட்டும் சம்பவம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மணமேடையில் புதுமணத் தம்பதி வாளால் கேக் வெட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த திருமணம் திருவேற்காடு அருகே நடந்ததாக தெரிகிறது. மணமக்களின் கையில் நீண்ட வாளைக் கொடுத்து கேக் வெட்டுமாறு நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள்.
பின்னர் மணமக்கள் வாளை வாங்கி கேக் வெட்டுகின்றனர். அப்போது மேடையில் நிற்கும் வாலிபர் ஒருவரும் நீண்ட வாளை கையில் வைத்தபடி உற்சாகத்தில் கூச்சலிடுகிறார்.
இதுபற்றி போலீசாருக்கும் புகார் வந்துள்ளது. வாளால் கேக் வெட்டிய புதுமணத் தம்பதி மற்றும் அவர்களது நண்பர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X