என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை
Byமாலை மலர்28 Jan 2020 5:49 AM GMT (Updated: 28 Jan 2020 8:07 AM GMT)
கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை:
சீன நாட்டில் உள்ள ஹூ பெய் மாகாணத்தில் வுகான் நகரில் இருந்து முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது.
இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் தற்போது வரை 80 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரசால் 29ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வைரசின் தாக்கம் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.
இந்தநிலையில் கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேர் நேற்று சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை சுகாதாரதுறை அதிகாரிகள் முழுமையாக பரிசோதனை செய்தனர். சோதனையில் 8 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் சுகாதாரதுறை அதிகாரிகள் சார்பில் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது இடங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற பொது நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது எனவும், வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.
இது குறித்து கோவை மாவட்ட சுகாதராத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-
சீன நாட்டிற்கு சென்று வரும் பயணிகளை முழுமையாக பரிசோதனை செய்யவும், கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக கோவை விமான நிலையத்தில் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்டறிந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேர் சீனா சென்று விட்டு கோவை விமான நிலையத்துக்கு வந்தனர். இவர்கள் பணிக்காவும், சுற்றுலாவுக்காகவும் சீனாவுக்கு சென்று இருந்தனர். கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து இவர்கள் ஊர் திரும்பி உள்ளனர்.
இதில் சென்னை, திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் குறித்து அந்தந்த மாவட்ட சுகாதார துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரையும் கண்காணித்து வருகின்றனர்.
கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேரை எங்கள் சிறப்பு குழு டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது 6 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. தினமும் அவர்களின் உடல் நிலை குறித்து கண்டறியப்பட்டு வருகிறது. பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். மேலும் அடுத்த 28 நாட்களுக்கு வீட்டிலேயே கண்காணிப்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சீன நாட்டில் உள்ள ஹூ பெய் மாகாணத்தில் வுகான் நகரில் இருந்து முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது.
இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் தற்போது வரை 80 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரசால் 29ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வைரசின் தாக்கம் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.
இந்தநிலையில் கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேர் நேற்று சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை சுகாதாரதுறை அதிகாரிகள் முழுமையாக பரிசோதனை செய்தனர். சோதனையில் 8 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் சுகாதாரதுறை அதிகாரிகள் சார்பில் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது இடங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற பொது நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது எனவும், வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.
இது குறித்து கோவை மாவட்ட சுகாதராத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-
சீன நாட்டிற்கு சென்று வரும் பயணிகளை முழுமையாக பரிசோதனை செய்யவும், கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக கோவை விமான நிலையத்தில் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்டறிந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேர் சீனா சென்று விட்டு கோவை விமான நிலையத்துக்கு வந்தனர். இவர்கள் பணிக்காவும், சுற்றுலாவுக்காகவும் சீனாவுக்கு சென்று இருந்தனர். கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து இவர்கள் ஊர் திரும்பி உள்ளனர்.
இதில் சென்னை, திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் குறித்து அந்தந்த மாவட்ட சுகாதார துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரையும் கண்காணித்து வருகின்றனர்.
கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேரை எங்கள் சிறப்பு குழு டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது 6 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. தினமும் அவர்களின் உடல் நிலை குறித்து கண்டறியப்பட்டு வருகிறது. பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். மேலும் அடுத்த 28 நாட்களுக்கு வீட்டிலேயே கண்காணிப்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X