என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்
திருமங்கலம்:
தமிழகமெங்கும் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் கட்டுமானம், பராமரிப்பு துறை சார்பில் கல்லுப்பட்டி பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 2 கிலோ மீட்டர் தூரம் மதுரை சாலையில் சாலை பாது காப்பு குறித்தும் அதன் அவசியம் குறித்தும் மாணவ- மாணவிகள் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்
பேரணி செல்லும் போது பஸ், ஆட்டோ, இருசக்கர வாகன ஓட்டுனர் கள் ஆகியோருக்கு துண்டு பிரசுரம் கொடுத்து சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்