என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்27 Jan 2020 1:57 PM GMT (Updated: 27 Jan 2020 1:57 PM GMT)
தருமபுரியில் குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி அடுத்துள்ள ஆலாபுரம் அருகே கள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60). விவசாயி. இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். மாணிக்கம் வீட்டில் சொந்தமாக ஆடு, மாடு வளர்த்து வருகிறார். இந்த ஆடு, மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்லாமல் மாணிக்கம் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே மனமுடைந்து காணப்பட்ட மாணிக்கம் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
இந்த நிலையில் வீட்டின் வெளியே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மாணிக்கத்தை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணிக்கம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X