search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயி தற்கொலை
    X
    விவசாயி தற்கொலை

    தருமபுரியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    தருமபுரியில் குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி அடுத்துள்ள ஆலாபுரம் அருகே கள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60). விவசாயி. இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். மாணிக்கம் வீட்டில் சொந்தமாக ஆடு, மாடு வளர்த்து வருகிறார். இந்த ஆடு, மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்லாமல் மாணிக்கம் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே மனமுடைந்து காணப்பட்ட மாணிக்கம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். 

    இந்த நிலையில் வீட்டின் வெளியே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மாணிக்கத்தை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணிக்கம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×