search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    திருச்சியில் கல்லூரி மாணவி மாயம்

    திருச்சியில் கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் நீளாங்கண்ணி தெருவை சேர்ந்தவர் கதிரவன் (வயது 42). இவரது மகள் காளீஸ்வரி (19) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 

    இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார், ஆனால் மாலை வீடுதிரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கதிரவன் எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

    புகாரின் பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×