என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியரசு தின விடுமுறை நாளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 66 பேர் கைது
Byமாலை மலர்27 Jan 2020 11:07 AM GMT (Updated: 27 Jan 2020 11:07 AM GMT)
கோவை அருகே குடியரசு தின விடுமுறை நாளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 66 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
குடியரசு தின விழாவையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. சட்டத்துக்கு புறம்பாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை மீறி கோவை மாவட்டம் பேரூர், ஆழியாறு, கோட்டூர், வால்பாறை, சூலூர், பொள்ளாச்சி, கோமங்கலம், நெகமம், மதுக்கரை தொண்டாமுத்தூர், வடவள்ளி, சிறுமுகை, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 37 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 322 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதே போல கோவை மாநகர பகுதிகளான காட்டூர், ராமநாதபுரம், சாய்பாபா காலனி, செல்வபுரம், போத்தனூர், சிங்காநல்லூர், குனியமுத்தூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 29 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 272 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடியரசு தின விழாவையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. சட்டத்துக்கு புறம்பாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை மீறி கோவை மாவட்டம் பேரூர், ஆழியாறு, கோட்டூர், வால்பாறை, சூலூர், பொள்ளாச்சி, கோமங்கலம், நெகமம், மதுக்கரை தொண்டாமுத்தூர், வடவள்ளி, சிறுமுகை, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 37 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 322 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதே போல கோவை மாநகர பகுதிகளான காட்டூர், ராமநாதபுரம், சாய்பாபா காலனி, செல்வபுரம், போத்தனூர், சிங்காநல்லூர், குனியமுத்தூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 29 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 272 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X