என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பொள்ளாச்சியில் தொழிலாளியை தாக்கி வழிப்பறி- 2 வாலிபர்கள் கைது
கோவை:
கோவை பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 38). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் வெங்கடேசை வழிமறித்து அவரை தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பலத்த காயமடைந்த அவர் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் தேடி வந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சின்னகமனனுக்கு அந்த வாலிபர்கள் பொள்ளாச்சி மார்க்கெட்டில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர்கள் ராம்குமார் (28),ஆஷிக் ரசூல் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் மீது பொள்ளாச்சி போலீஸ் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்பட பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்