என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தந்தை அடித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய கடலூர் மாணவன் சென்னையில் மீட்பு
Byமாலை மலர்27 Jan 2020 8:42 AM GMT (Updated: 27 Jan 2020 8:42 AM GMT)
தந்தை அடித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய கடலூர் மாணவனை சென்னையில் உள்ள அவரது தாயாரிடம் போலீசார் ஓப்படைத்தனர்.
போரூர்:
வடபழனி பஸ் நிலையம் அருகே இன்று அதிகாலை சிறுவன் ஒருவன் சுற்றி திரிந்தான்.
இதுபற்றி ஆட்டோ டிரைவர்கள் வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சிறுவனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் அந்த சிறுவன் கடலூர் மாவட்டம் இரும்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் ஆகாஷ் (14) என்பதும், அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது. ஆகாஷை தந்தை செந்தில் அடித்ததால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வடபழனியில் பணிபுரிந்து வரும் தாய் இந்திராவை தேடி சென்னைக்கு வந்தது தெரியவந்தது. உடனடியாக தந்தை செந்திலை தொடர்பு கொண்டு பேசினார்கள்.
வடபழனி தனலட்சுமி காலனி நடராஜன் தெருவில் உள்ள சினிமா டைரக்டர் செந்தில்நாதன் வீட்டில் இந்திரா தங்கி வேலை பார்த்து வருவது தெரிந்தது.
அவரை வரவழைத்த போலீசார் மகன் ஆகாஷை இந்திராவிடம் ஓப்படைத்தனர்.
வடபழனி பஸ் நிலையம் அருகே இன்று அதிகாலை சிறுவன் ஒருவன் சுற்றி திரிந்தான்.
இதுபற்றி ஆட்டோ டிரைவர்கள் வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சிறுவனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் அந்த சிறுவன் கடலூர் மாவட்டம் இரும்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் ஆகாஷ் (14) என்பதும், அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது. ஆகாஷை தந்தை செந்தில் அடித்ததால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வடபழனியில் பணிபுரிந்து வரும் தாய் இந்திராவை தேடி சென்னைக்கு வந்தது தெரியவந்தது. உடனடியாக தந்தை செந்திலை தொடர்பு கொண்டு பேசினார்கள்.
வடபழனி தனலட்சுமி காலனி நடராஜன் தெருவில் உள்ள சினிமா டைரக்டர் செந்தில்நாதன் வீட்டில் இந்திரா தங்கி வேலை பார்த்து வருவது தெரிந்தது.
அவரை வரவழைத்த போலீசார் மகன் ஆகாஷை இந்திராவிடம் ஓப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X