search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டுமோ?: ப.சிதம்பரம்

    இந்திய குடியரசை மீட்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டுமோ? என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    சென்னை :

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா ஒரு குடியரசு, முடியரசு அல்ல. யாருக்கும் இங்கு முடி சூட்டவில்லை. யாரும் இங்கு மன்னரில்லை. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. வரிக் குளறுபடி, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை ஒரு சர்வாதிகார அரசனின் நடவடிக்கைகளை நினைவுபடுத்துகின்றன.

    இந்திய குடியரசை மீட்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டுமோ? இந்திய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் என் வணக்கம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×