என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை ஆலங்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது31). வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பொற்கலை என்கிற காந்திமதி (27). இவர் குயிலாப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கிஷோர் (6) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் பாலச்சந்திரன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் மதுபழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பும் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாலசந்திரன் கோவித்து விட்டு பனையபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று பொற்கலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலைமுடிந்து மாலை வீட்டிற்கு வந்த போது பாலசந்திரன் வீட்டின் உள்ள இரும்பு கம்பியில் தனது மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த பொற்கலை அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாலசந்திரனை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து அவரது மனைவி பொற்கலை என்கிற காந்திமதி கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்