search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கோவை அருகே மயங்கி விழுந்து வாலிபர் பலி

    கோவை அருகே மயங்கி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    அசாமை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் பேகா(வயது 27). இவர் கோவை கோவில்பாளையம் கணே‌ஷபுரம் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ஜெயபிரகாஷ் பேகா அவரது அறையில் மயங்கி கிடப்பதாக அவருடன் வேலை பார்த்து வரும் பணியாளர்களுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அவர்கள் ஜெயபிரகாஷ் பேகாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×