என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லாததால் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வில்லை- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
பூந்தமல்லி:
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் போரூர் அடுத்த அய்யப் பன்தாங்கல் பகுதியில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஏ.என்.இ.பூபதி தலைமை தாங்கினார். இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
தமிழ் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ்ந்திட வந்தவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான். மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அ.தி.மு.க. விற்கு தான் தகுதி உண்டு.
ஒரே ஆண்டில் 9 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்த ஒரே அரசு அ.தி.மு.க. தான். மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்தார்கள். அதன் பின் பொறுப்பேற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா 29 ஆண்டுகள் பொதுச் செயலாளராக இருந்து 1½ கோடி தொண்டர்களை கொண்டு வந்தார்.
அ.தி.மு.க. வின் ஆட்சி பொற்கால ஆட்சி. மு.க. ஸ்டாலின் என்றுமே முதல்வர் ஆக முடியாது. வடிவேல் காமெடி போல் “நீ எதுக்கும் சரிப்பட்டு வரமாட்ட.
கருணாநிதி உடல் நலம் நன்றாக இருந்தபோதும், சரியில்லாதபோதும் ஸ்டாலினை முதல்வராக்க நினைக்கவில்லை. அவருக்கே மகன் ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லை. தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கே.பழனி எம்.எல்.ஏ , அமைப்பு செயலாளர்கள் மைதிலி திருநாவுக்கரசு, வி.சோம சுந்தரம், காஞ்சிபன்னீர் செல்வம், எழிச்சூர் ராமசந்திரன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், எஸ்.எம். சுந்தர்ராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்