search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கோவையில் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

    கோவையில் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூர் காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஜோப். இவரது மகன் நித்தி விக்கர்(வயது 24). தனியார் நிறுவன ஊழியர் இவர் சம்பவத்தன்று காலை கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் மொபட்டில் சென்றார்.

    அப்போது மேட்டுப்பாளையம் புது பஸ்நிலையம் அருகே உள்ள பஸ் டெப்போவுக்குள் ஊட்டியில் இருந்த வந்த பஸ் திரும்ப முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த நித்தி விக்கரின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    Next Story
    ×