என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தினகரனின் கூடாரம் காலியாகி வருகிறது- புகழேந்தி
சேலம்:
சேலம் சூரமங்கலம் பகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பழைய சூரமங்கலத்தில் நடந்தது.
கூட்டத்தில் கர்நாடக மாநில முன்னாள் செயலாளர் புகழேந்தி பேசியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. இருக்குமா? இந்த ஆட்சி நீடிக்குமா? என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யார் பொறுப்புக்கு வந்திருந்தாலும் இந்த ஆட்சி நீடித்திருக்க முடியாது.
அவரது நிர்வாக திறமையால் மட்டுமே கட்சியும், ஆட்சியும் வீறுநடை போட்டு வருகிறது. 97 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியை கலைத்து விட வேண்டுமென்று திட்டம் போட்டார். ஆனால் முதல்-அமைச்சரின் சாமர்த்தியத்தால் எதுவும் நடக்கவில்லை.
உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலிலும் பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். டி.டி.வி.தினகரனின் கூடாரம் காலி ஆகி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்