search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

    ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை அடுத்துள்ள நெருப்பூர் குட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ராமலிங்கம் (வயது22). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நெல்லூர் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ராமலிங்கம் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×