search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு முருகானந்தம் தலைமையில் ஜீவஜோதி பாஜகவில் இணைந்த காட்சி.
    X
    கருப்பு முருகானந்தம் தலைமையில் ஜீவஜோதி பாஜகவில் இணைந்த காட்சி.

    ரஜினிகாந்தின் துணிச்சல் யாருக்கு வரும்- பாஜகவில் இணைந்த ஜீவஜோதி பேட்டி

    பெரியார் பற்றிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இந்த கெத்து யாருக்கு வரும் என்று பா.ஜ.க.வில் இணைந்த ஜீவஜோதி கூறியுள்ளார்.

    தஞ்சை:

    நாகை, வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடியைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். தனியார் பள்ளி ஆசிரியரான இவருடன், ஜீவஜோதி சென்னையில் வசித்து வந்தார். ஜீவஜோதியின் தந்தை ராமசாமி, சரவண பவன் ஓட்டலில் பணியாற்றி வந்தார். இதன்மூலம், அதன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஜீவஜோதி அறிமுகமானார். ஒரு கட்டத்தில், ராஜகோபால் ஏற்பாடு செய்த கூலிப்படையால், பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டார்.

    தன்னை திருமணம் செய்யவே, தன் கணவரை ராஜகோபால் கொலை செய்ததாக, ஜீவஜோதி அளித்த புகாரின்படி, ராஜகோபால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில், ராஜகோபால் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    கணவர் இறப்புக்கு பின், தஞ்சைக்கு வந்து விட்ட ஜீவஜோதி, தன் பள்ளி தோழரை மறுமணம் செய்து, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, டெய்லர் கடை நடத்தி வந்தார். தற்போது, வல்லம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே, தன் தந்தை ராமசாமி பெயரில், மெஸ் நடத்தி வருகிறார். அரசியலுக்கு வர ஆசைப்பட்ட ஜீவஜோதி, இரு மாதங்களுக்கு முன், பா.ஜ., மாநில நிர்வாகி வானதி சீனிவாசனை பார்த்து, தன் ஆசையை தெரிவித்தார்.

    ஜீவஜோதி பா.ஜ.க.வில் இணைவதற்கான விழாவுக்கு சென்னையில் 2 முறை, திருச்சியில் ஒரு முறை ஏற்பாடு செய்யப்பட்டு தள்ளிபோனது.

    இந்நிலையில், தஞ்சையில் நடைபெற்ற பா.ஜ.க. புதிய மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில், பா.ஜ..க. மாநில செயலர் கருப்பு முருகானந்தம் தலைமையில், ஜீவஜோதி, பா.ஜ.க.வில் இணைந்தார்.

    பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து ஜீவஜோதி மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க.வில் 3 மாதத்திற்கு முன்பு உறுப்பினராக சேர்ந்து விட்டேன். இப்போது முறைப்படி பொதுச் செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளேன். அவரது வழிகாட்டுதலின்படி என் கட்சி பணி இருக்கும். அரசியலில் எனக்கு அனுபவம் கிடையாது. ஆனால் ஆர்வம் இருக்கிறது. ஆர்வம் இருந்தால் போதும்தானே. அதனால்தான் கட்சியில் இணைந்துள்ளேன்.

    என்னுடைய ரோல் மாடல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரை நான் கடவுளுக்கு நிகராக பார்க்கிறேன். நான் இன்று உயிருடன் உங்களுடன் பேசி கொண்டிருப்பதற்கு ஜெயலலிதாதான் காரணம். பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது திட்டங்களை படித்தவர்கள், இளைஞர்கள் புரிந்துள்ளனர். அதனால்தான் அவரை ஆதரிக்கிறார்கள். ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சியினர் அவரது திட்டங்கள் மக்களுக்கு சென்றடையாமல் தடுப்பதையே வேலையாக செய்கிறார்கள். இதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். பாதுகாப்பு கருதி நான் பா.ஜ.க.வில் இணையவில்லை. எனக்கு எந்த பயமும் கிடையாது.

    ஜீவஜோதி

    பயம் இருந்திருந்தால் இதற்கு முன்பே ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்திருப்பேன். பா.ஜ.க.வின் சாதாரண தொண்டராக இருந்து கட்சி பணியாற்ற விரும்புகிறேன். தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர வில்லை என்கிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க.வின் அசுர வெற்றியை பார்க்கத்தான் போகிறீர்கள். குடியுரிமை சட்டம் தொடர்பான புரிதல் இல்லாமல் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

    நடிகர் ரஜினிகாந்தை நான் ஆதரிக்கிறேன். பெரியார் பற்றிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று அவர் கூறினார். இந்த கெத்து யாருக்கு வரும்?. இந்த விவகாரத்தில் ரஜினிகாந்திற்கு ஆதரவு பெருகி கொண்டேதான் இருக்கிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×