என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது
Byமாலை மலர்24 Jan 2020 11:05 AM GMT (Updated: 24 Jan 2020 11:05 AM GMT)
தூத்துக்குடியில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மோகன் என்ற மோகன் ராஜ்(வயது 41). பிரபல ரவுடியான இவர் மீது தூத்துக்குடி வடபாகம், தாளமுத்து நகர் போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் மோகன் அப்பகுதியில் உள்ள பழைய குற்றவாளி ஒருவரை கொலை செய்ய போவதாக கூறிவந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோகனை கைது செய்ய சென்றனர். உடனே போலீஸ் வருவதை பார்த்த மோகன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை விரட்டி சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு சுவரின் மீது ஏறிய மோகன் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X