search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    ஊத்தங்கரை அருகே இளம்பெண் கடத்தல்- கணவர் போலீசில் புகார்

    ஊத்தங்கரை அருகே கடைக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பாதது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள பெருமாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது32). இவரது மனைவி விஜயலட்சுமி (27). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆன நிலையில் 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி அன்று மாலை விஜயலட்சுமி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து குணசேகரன் ஊத்தங்கரை போலீசில் எனது மனைவியை இதே பகுதியை சேர்ந்த சங்கர் மகன் ரகு (27) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு மாயமான விஜயலட்சுமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×