search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    மதுரை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

    மதுரை அருகே தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மதுரை:

    மதுரை ஊமச்சிக்குளத்தை அடுத்த வீரபாண்டி திருமால்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 53), விவசாயி. இவர் நேற்று மதியம் சகோதரரின் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ஜெயபிரகாஷ் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ஊமச்சிக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). வலிப்பு நோயால் அவதிப் பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்தவர் சம்பவத்தன்று மாலை வீட்டில் தூக்குப்போட்டார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.

    இதனால் தூக்கு கயிறு அறுந்து கீழே விழுந்தவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் குணசேகரன் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தப்பநாயக்கனூரை அடுத்த வெள்ளைமலைப்பட்டி பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (60). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் நோய் குணமாக வில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பழனிசாமி நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு இறந்தார். இது குறித்து உத்தப்ப நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×