என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆளுநர் மாளிகையில் நேதாஜி சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
Byமாலை மலர்23 Jan 2020 12:22 PM GMT (Updated: 23 Jan 2020 12:22 PM GMT)
சென்னை ஆளுநர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
சென்னை:
சுதந்திரப் போராட்ட வீரர் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோசின் 123-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்தும் முக்கிய தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
இந்நிலையில், நேதாஜியின் பிறந்த நாளையொட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 6 அடி உயர வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
இந்த சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், விடுதலைக்கான வேள்வியை வளர்த்த நேதாஜி, ஜெய்ஹிந்த் என்ற வார்தைக்கு உயிர் கொடுத்தவர் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X