என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செல்போன் பறிக்கும் முயற்சியில் வியாபாரியை அரிவாளால் வெட்டிய கொள்ளை கும்பல்
அம்பத்தூர்:
அயனாவரம் உஜ்ஜினி தெருவை சேர்ந்தவர் விஜய்சேகர். கோயம்பேட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் கடைக்கு செல்வதற்காக நூர் ஹோட்டல் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் விஜய்சேகரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் விஜய்சேகர் செல்போனை கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் 3 பேரும் அரிவாளால் விஜய்சேகரை சரமாரியாக வெட்டிவிட்டு செல்போன், பணம் மற்றும் மளிகைக்கடை சாவி ஆகியவற்றை பறித்து தப்பி சென்று விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரது அலறல் சத்தம் கேட்டு பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அயனாவரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விஜயசேகரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அயனாவரம் போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்