search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போலீஸ் ஏட்டை கொல்ல முயற்சி - பாரிமுனையில் 2 பேர் கைது

    சென்னை அருகே போலீஸ் ஏட்டை காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் நேற்று மாலை போக்குவரத்துக்கு இடையூறாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

    அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு செந்தில்குமார் காரை எடுக்குமாறு கூறினார். காரில் இருந்த பெரோஸ்கான் தனது நண்பருடன் சேர்ந்து போலீஸ் ஏட்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனைப் பார்த்து வாகன ஓட்டியை காரை எடுக்கச் சொல்லி சத்தம் போட்டனர்.

    அப்போது பெரோஸ் கானும் அவரது நண்பரும் போலீஸ் ஏட்டு செந்தில் குமார் மீது காரை ஏற்றியதாக தெரிகிறது.

    காயம் அடைந்த செந்தில் குமார் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் பெரோஸ்கானும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவர் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×