search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவண்ணாமலையில் பயணியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

    திருவண்ணாமலையில் பயணியிடம் இருந்து ரூ. 500-ஐ பறித்து சென்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டம் கெங்கணாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). இவர் தனது ஊருக்குச் செல்வதற்காக திருவண்ணாமலை பஸ் நிலையம் வந்தார். அவர் தனது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.500-ஐ 2 வாலிபர்கள் பறித்துக் கொண்டு ஓடினர். அவர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

    இதில் அவர்கள் கீழ்னாத்தூர் காலனியை சேர்ந்த தினேஷ்(23) திருவண்ணாமலை பல்லவன் நகரை சேர்ந்த விஜய் ஆனந்த் (19) என்று தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×