search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தந்தையை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த லாரி கிளீனர் கைது

    நாசரேத் அருகே மோட்டார்சைக்கிள் வாங்கி தராத ஆத்திரத்தில் தந்தையை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த லாரி கிளீனரை போலீசார் கைது செய்தனர்.
    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள வெள்ளமடம் கோவில் குடியிருப்பைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 40) ஆட்டோ டிரைவர். இவரது மகன் பிரவீன் (20). இவர் தூத்துக்குடியில் ஒரு தனியார் லாரி கம்பெனியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிபழக்கம் உள்ளது. மேலும் இவர் கடந்த சில மாதங்களாக தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்றும் தந்தையிடம், எனது நண்பர்கள் எல்லோரும் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கிறார்கள். எனவே எனக்கும் பைக் வாங்கி தருமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இதனால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பிரவீன் தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து அருள்ராஜ் நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கேஷ்வரன் வழக்குப் பதிவுசெய்து, தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பிரவீனை கைது செய்தார்.

    Next Story
    ×