search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேப்பனப்பள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    வேப்பனப்பள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
    வேப்பனப்பள்ளி:

    கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தடத்தரை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). விவசாயி. இவருக்கும் சூளகிரி அருகே உள்ள அஞ்சலகிரியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் மகள் பிரேமா (19) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த பிரேமா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பிரேமாவின் பெற்றோர் வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரேமாவுக்கு திருமணம் ஆகி 7 மாதங்களே ஆவதால் இந்த சம்பவம் தொடர்பாக கிரு‌‌ஷ்ணகிரி உதவி கலெக்டர் தெய்வநாயகி விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×