என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியார் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை- ஓ பன்னீர்செல்வம் பேட்டி
Byமாலை மலர்21 Jan 2020 4:13 PM GMT (Updated: 21 Jan 2020 4:13 PM GMT)
என்னைப் போன்றவர்கள் இந்த நிலைக்கு வர பெரியார் தான் காரணம் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:
சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கை விழாவில் பேசிய ரஜினி, பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் சார்பில் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினி இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ மாட்டேன் என கூறினார். தான்கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார்.
இந்நிலையில் பெரியார் பற்றி ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தது குறித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியதாவது:-
தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ரஜினிகாந்த் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X