search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    பெரியார் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை- ஓ பன்னீர்செல்வம் பேட்டி

    என்னைப் போன்றவர்கள் இந்த நிலைக்கு வர பெரியார் தான் காரணம் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கை விழாவில் பேசிய ரஜினி, பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் சார்பில் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினி இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ மாட்டேன் என கூறினார். தான்கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார். 
    ரஜினிகாந்த்
    இந்நிலையில் பெரியார் பற்றி ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தது குறித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியதாவது:- 

    தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ரஜினிகாந்த் பேச வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×