search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சுரண்டை அருகே வாகனம் மோதி பெண் பலி

    சுரண்டை அருகே நடந்து சென்ற பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள வேலப்ப நாடாரூரை சேர்ந்தவர் செல்வகுமார், கூலித்தொழிலாளி. இவரது மனைவி அருள் வான்மதி(வயது 22). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று அருள் வான்மதி சுரண்டை அருகே உள்ள பள்ளம்புளி சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்தகாயம் அடைந்த அருள் வான்மதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×