என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கிருமாம்பாக்கம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே மதிகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42). கட்டிட மேஸ்திரி. இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், முத்துக்குமரன் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே சிவக்குமார்க்கு சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
தான் சம்பாதிக்கும் பணம் முழுவதும் மருத்துவத்திற்கே செலவானதால் இதுபற்றி சிவக்குமார் தனது மனைவி புஷ்பாவிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். அதற்கு புஷ்பா ஆறுதல் கூறி உடல்நிலை தேறிவிட்டால் சம்பாதித்து கொள்ளலாம் என சமாதானம் செய்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென விரக்தி அடைந்த சிவக்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மதுவை வாங்கி வந்து அதில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) கலந்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று மதியம் சிவக்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் முத்துக்குமரன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, ஏட்டு லூர்துநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்