என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியார் விவகாரத்தில் ரஜினி உண்மை தெரிந்த பின்பு நிச்சயம் மன்னிப்பு கேட்பார்- உதயநிதி ஸ்டாலின்
Byமாலை மலர்21 Jan 2020 11:14 AM GMT (Updated: 21 Jan 2020 11:14 AM GMT)
பெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி, பெரியார் பற்றி குறிப்பிட்டுப் பேசிய நிகழ்வு சர்ச்சையானது.
இந்நிலையில் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் பெரியார் குறித்துப் பேசியது சரிதான். அதற்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று கூறியிருந்தார்.
இது குறித்துப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ''நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். அவரிடம் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 95 ஆண்டு காலம் தமிழ் இனத்திற்காகப் போராடிய பெரியாரைப் பற்றிப் பேசும்போது யோசித்துச் சிந்தித்துப் பேச வேண்டும்'' என்று கூறினார்.
இதனையடுத்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அவசரச் செயற்குழு கூட்டத்திற்குப் பின்பு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பெரியார் பற்றி நான் கூறியதற்கு நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ரஜினி கூறி உள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த உதயநிதி, ''ரஜினி அரசியலுக்கு வந்த பின்பு நாங்கள் பதில் கூறுவோம். காவிரி விவகாரத்தில் உண்மை தெரிந்த பின்பு அவர் மன்னிப்பு கோரியது போல, பெரியார் விவகாரத்திலும் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார்.
துக்ளக் விழாவில் அவர் தெரியாமல் பேசிவிட்டார். நிச்சயம் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார்'' என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X