search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

    கோவையில் தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி பிரியா (வயது 29). இவர்களுக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா தனது கணவரை பிரிந்து வசித்து வந்தார்.

    நள்ளிரவு வீட்டில் இருந்த இவர் அறையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்துகொண்ட பிரியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×