என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெங்கடேசபுரத்தில் மின்கம்பம் மீது லாரி மோதல் - கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்தது
Byமாலை மலர்20 Jan 2020 5:14 PM GMT (Updated: 20 Jan 2020 5:14 PM GMT)
பெரம்பலூர் அருகே வெங்கடேசபுரத்தில் மின்கம்பம் மீது லாரி மோதிய விபத்தில் கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்று உள்ளது. அந்த ஏஜென்சிக்கு நேற்று காலை திருச்சியில் இருந்து லாரி மூலம் கியாஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டது. அப்போது டிரைவர் லாரியை பின்னால் இயக்கி போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து சரிந்ததில் மின்சார கம்பிகள் லாரியில் இருந்த ஒரு கியாஸ் சிலிண்டர் மீது விழுந்ததில் தீப்பிடித்து எரிந்தது.
இதனை கண்ட லாரி டிரைவர் உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அதிகாரிக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை நிறுத்தி, கியாஸ் சிலிண்டர் மீது எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பான் கருவி மூலம் அணைத்தார். கியாஸ் சிலிண்டர் மீது எரிந்த தீயை உடனடியாக அணைத்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சரிந்து விழுந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்றதால் வெங்கடேசபுரம் பகுதியில் மதியம் வரை மின்தடை ஏற்பட்டது.
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்று உள்ளது. அந்த ஏஜென்சிக்கு நேற்று காலை திருச்சியில் இருந்து லாரி மூலம் கியாஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டது. அப்போது டிரைவர் லாரியை பின்னால் இயக்கி போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து சரிந்ததில் மின்சார கம்பிகள் லாரியில் இருந்த ஒரு கியாஸ் சிலிண்டர் மீது விழுந்ததில் தீப்பிடித்து எரிந்தது.
இதனை கண்ட லாரி டிரைவர் உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அதிகாரிக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை நிறுத்தி, கியாஸ் சிலிண்டர் மீது எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பான் கருவி மூலம் அணைத்தார். கியாஸ் சிலிண்டர் மீது எரிந்த தீயை உடனடியாக அணைத்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சரிந்து விழுந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்றதால் வெங்கடேசபுரம் பகுதியில் மதியம் வரை மின்தடை ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X