search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவில்பட்டியில் முதியவரை கொல்ல முயன்ற 4 பேர் கைது

    கோவில்பட்டியில் முதியவரை கொல்ல முயன்ற சம்பவம் குறித்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது66). சம்பவத்தன்று இவர் மேல பார்க் சாலை வாட்டர்டேங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மகனை கொன்ற வழக்கில் தொடர்புடைய சின்னராஜ் உள்பட 4 பேர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர்.

    இதையடுத்து அங்கிருந்து தப்பியோடிய பெருமாள், அந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பெருமாளை வெட்ட முயன்ற 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் வீரவாஞ்சி நகர் 4-வது தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சின்னராஜ்(32), குருமலை வடக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் கொம்பையா(32), அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் பூல்பாண்டி(28), கடம்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் துரைப்பாண்டி (30) என்பது விசாரணையில் தெரியவந்தது.

    முதியவரை வழிமறித்து கொல்ல முயன்றதாக வழக்குப்பதிந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×