என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் பண்டிகை- 3 நாட்களில் ரூ.610 கோடிக்கு மதுபானம் விற்பனை
Byமாலை மலர்20 Jan 2020 7:49 AM GMT (Updated: 20 Jan 2020 10:05 AM GMT)
பொங்கல் பண்டிகை காலத்தில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் 10 சதவிகிதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 3 நாட்களில் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
சென்னை:
பண்டிகை காலங்களில் மதுபானம் விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகை காலத்தில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் 10 சதவிகிதம் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 3 நாட்களில் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில் 5600 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 300 கடைகள் உள்ளன. போகிப்பொங்கல் தினமான 14-ந்தேதி மற்றும் காணும் பொங்கலான 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. 15-ந்தேதி பொங்கல் அன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
திருச்சி மற்றும் மதுரை மண்டலத்தில் மட்டும் இந்த 3 நாட்களில் ரூ.250 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் ரூ.105 கோடிக்கு இந்த கால கட்டத்தில் மது விற்பனை மூலம் வருவாய் கிடைத்துள்ளது. சென்னையில் மது விற்பனை குறைந்ததற்கு காரணம் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு பயணம் செய்ததே ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகை விடுமுறையில் 16-ந்தேதி திருவள்ளுவர் தினமும் சேருகிறது. அன்றைய தினம் மது விற்பனை கிடையாது. ஆனாலும் இந்த அளவிற்கு மதுவிற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனை அக்டோபர் 25 மற்றும் 27-ந்தேதியில் ரூ.455 கோடி மதுவிற்பனை நடந்துள்ளது. இதைவிட பொங்கலில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.
பண்டிகை காலங்களில் மதுபானம் விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகை காலத்தில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் 10 சதவிகிதம் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 3 நாட்களில் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில் 5600 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 300 கடைகள் உள்ளன. போகிப்பொங்கல் தினமான 14-ந்தேதி மற்றும் காணும் பொங்கலான 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. 15-ந்தேதி பொங்கல் அன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
இது இதுவரையில் இல்லாத விற்பனை ஆகும். காணும் பொங்கல் தினத்தில் ரூ.175 கோடிக்கும், போகி பண்டிகை அன்று ரூ.180 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது வார இறுதியில் நடைபெறும் விற்பனையை விட அதிகமாகும். வார இறுதியில் சராசரியாக ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரை விற்பனை ஆகும். அதை விட போகி மற்றும் காணும் பொங்கலில் விற்பனை நடந்துள்ளது.
திருச்சி மற்றும் மதுரை மண்டலத்தில் மட்டும் இந்த 3 நாட்களில் ரூ.250 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் ரூ.105 கோடிக்கு இந்த கால கட்டத்தில் மது விற்பனை மூலம் வருவாய் கிடைத்துள்ளது. சென்னையில் மது விற்பனை குறைந்ததற்கு காரணம் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு பயணம் செய்ததே ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகை விடுமுறையில் 16-ந்தேதி திருவள்ளுவர் தினமும் சேருகிறது. அன்றைய தினம் மது விற்பனை கிடையாது. ஆனாலும் இந்த அளவிற்கு மதுவிற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனை அக்டோபர் 25 மற்றும் 27-ந்தேதியில் ரூ.455 கோடி மதுவிற்பனை நடந்துள்ளது. இதைவிட பொங்கலில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X