search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கொலை: 2 பேர் கைது

    மார்த்தாண்டத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிளஸ் 2 மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை ஆயிரம்தெங்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 72). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்.

    இவரது சகோதரர் குமார். இவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் உண்டியல் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த உண்டியலை செல்வராஜும், குமாரும் அப்புறப்படுத்தினார்கள்.

    இதை அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு செல்வராஜ் ஆயிரம்தெங்கு பெரிய குளத்தின் கரையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு சென்ற கிருஷ்ணகுமார் அவரிடம் தகராறு செய்தார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் கிருஷ்ணகுமாருடன் சேர்ந்து 4 பேர் கொண்ட கும்பல் செல்வராஜை சரமாரியாக தாக்கியது. வெட்டுக்கத்தியாலும் வெட்டினார்கள்.

    பின்னர் அவரை காலால் மிதித்து குளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் செல்வராஜ் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகுமார், சிவக்குமார், அஸ்வின், அவரது சகோதரரான பிளஸ்-2 மாணவர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் கிருஷ்ணகுமாரையும், பிளஸ்-2 மாணவரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விசாரணையில் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தையும், சிலரும் சேர்ந்து கோவில் ஒன்றில் உண்டியல் ஒன்றை வைத்தனர். அந்த உண்டியலை செல்வராஜ், குமார் இருவரும் சேர்ந்து அப்புறப்படுத்திவிட்டனர். இது தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது என்னிடம் தகராறு செய்துவந்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நேற்று இரவும் செல்வராஜ் என்னிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் எனது உறவினர்களுடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தலைமறைவாகி உள்ள சிவக்குமார், அஸ்வின் இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×