என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தி.மு.க. கூட்டணி உடையும் என ஜெயக்குமார் பகல் கனவு காண்கிறார்- முத்தரசன் பேட்டி
நெல்லை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வு காணாமல் இருப்பதால் துன்பம், துயரங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் ஆகும். நாடாளுமன்றத்தில் மக்கள் விரோத தீர்மானங்களையே நிறைவேற்றி வருகின்றனர். மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் வருகிற 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. 30-ந் தேதி காந்தி நினைவு நாளையொட்டி கருத்தரங்கு, பேரணி நடத்தப்படும்.
தி.மு.க. கூட்டணியில் பிரச்சினையை கூறிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியே அதற்கு தீர்வும் கண்டுள்ளார். எங்களது மதசார்பற்ற கூட்டணி தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. 3 ஆண்டுகளாக மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். நடுவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று உள்ளோம்.
தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளோம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சி தர்மம் ஒருசில இடங்களில் மீறப்பட்டுள்ளது. அது விரைவில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் பேசி சரி செய்யப்படும். தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தமிழகத்துக்கு தேவையான ஒரு கூட்டணி ஆகும்.
இந்த அணி கண்டிப்பாக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பிரச்சினைகளை கண்டு கொள்ள வேண்டியதில்லை. தி.மு.க. கூட்டணி உடையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பகல் கனவு காண்கிறார். அவர் ஏராளமான கனவுகளை கண்டு வருகிறார். அவையெல்லாம் பகல் கனவாக முடியப்போகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. ஜனநாயக படுகொலை செய்துள்ளது. விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற பகுதி உள்ளாட்சி தேர்தல்களையும் உடனே நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்