search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சாப்டூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

    சாப்டூர் அருகே வாகனம் மோதியதில் மூதாட்டி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சாப்டூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட அணைக் கரைப்பட்டியைச் சேர்ந்தவர் செல்லபாண்டி. இவரது மனைவி வேலம்மாள் (வயது70).

    இவர் காட்டு பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வேலம்மாள் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சாப்டூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பது குறித்து சாப்டூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×