search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கும்பகோணம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

    கும்பகோணம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே செம்மங்குடி கீழே தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி கூலி தொழிலாளி. இவரது மனைவி வினோதா (வயது 35). கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மனமுடைந்த வினோதா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அருகில் உள்ளவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து நாச்சியார் கோயில் இன்ஸ்பெக்டராக ரேகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×