search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கோயம்பேட்டில் இருந்து சென்ற வேன் கவிழ்ந்து 10 வியாபாரிகள் காயம்

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வியாபாரிகள் காயம் அடைந்தனர்.
    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து இன்று காலை சரக்கு வேனில் காய்கறி, பழம், பூக்களை ஏற்றிக்கொண்டு 22 வியாபாரிகள் கும்மிடிப்பூண்டியை அடுத்த சத்தியவேடுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    கவரப்பேட்டையை அடுத்த பெரவள்ளூர் என்ற இடத்தில் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் வேனை ஓட்டிய டெல்லி, வியாபாரிகள் குப்பையா, சித்ரா, மலர், பரந்தமையா, நரசிம்மலு, சேகர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்தால் சென்னை கொல்கத்தா-தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×