என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உடன்குடி அருகே டாஸ்மாக் பாரை உடைத்து திருடிய வாலிபர்கள் கைது
உடன்குடி;
உடன்குடி அருகே உள்ள தேரியூரை சேர்ந்தவர் மதன்ராஜ்(வயது 35). இவர் உடன்குடி பஸ்நிலையம் அருகே பார் நடத்தி வருகிறார். இவர் கடந்த 9-ந்தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் 10-ந்தேதி காலை கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடையில் வைத்திருந்த ரூ.5000 பணம் காணாமல் போயிருந்தது. உடனே இதுகுறித்து மதன்ராஜ் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.
அதனடிப்படையில் உடன்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த மூர்த்தி மகன் சவுந்தர்(22), உடன்குடி வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த ஆண்டி மகன் ஈஸ்வரமூர்த்தி(22), காயாமொழி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் யாக்கோபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்பு திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்