என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது
Byமாலை மலர்18 Jan 2020 8:29 AM GMT (Updated: 18 Jan 2020 8:29 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே மனைவியை தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே சிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது38). இவரது மனைவி பவித்ரா (30). சம்பவத்தன்று வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி கரும்புதட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வருஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.
குன்னூர் ஊரணி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன் (30). சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவரை வழி மறித்த ராம்குமார், ராஜபிரபு, முத்துபிரவீன் ஆகியோர் ஏன் வாகனத்தை வேகமாக ஓட்டுகிறாய்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து க.விலக்கு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X