என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4¼ கிலோ கஞ்சாவுடன் தாய்-மகன் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்18 Jan 2020 6:48 AM GMT (Updated: 18 Jan 2020 6:48 AM GMT)
மதுரையில் 4¼ கிலோ கஞ்சாவுடன் தாய்-மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக எஸ்.எஸ். காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் போலீசாருடன் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது ஒரு வீட்டின் மாட்டுக் கொட்டகையில் பதுங்கியிருந்த பெண் உள்பட 3 பேர் தப்பி ஓடுவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் எல்லீஸ் நகர் போடி லைனை சேர்ந்த வெள்ளையன் மனைவி தனபாக்கியம் (வயது 65), அவரது மகன் செந்தில்குமார் (39) மற்றும் திடீர் நகர் 3-வது பிளாக் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (30) என்பது தெரிய வந்தது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொள்முதல் செய்வதாகவும், அவரிடம் இருந்து நாங்கள் வாங்கி சில்லரை விலைக்கு விற்பதாகவும் கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து தனபாக்கியம், செந்தில் குமார், இளையராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்த எஸ்.எஸ்.காலனி போலீசார் அவர்களிடம் இருந்து 4¼ கிலோ கஞ்சா, ரூ. 800 ரொக்கம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக எஸ்.எஸ். காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் போலீசாருடன் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது ஒரு வீட்டின் மாட்டுக் கொட்டகையில் பதுங்கியிருந்த பெண் உள்பட 3 பேர் தப்பி ஓடுவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் எல்லீஸ் நகர் போடி லைனை சேர்ந்த வெள்ளையன் மனைவி தனபாக்கியம் (வயது 65), அவரது மகன் செந்தில்குமார் (39) மற்றும் திடீர் நகர் 3-வது பிளாக் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (30) என்பது தெரிய வந்தது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொள்முதல் செய்வதாகவும், அவரிடம் இருந்து நாங்கள் வாங்கி சில்லரை விலைக்கு விற்பதாகவும் கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து தனபாக்கியம், செந்தில் குமார், இளையராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்த எஸ்.எஸ்.காலனி போலீசார் அவர்களிடம் இருந்து 4¼ கிலோ கஞ்சா, ரூ. 800 ரொக்கம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X