search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    துவாக்குடி-திருவெறும்பூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    துவாக்குடி மற்றும் திருவெறும்பூர் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவெறும்பூர் துணை மின்நிலையத்தில் நாளை 18-ந்தேதி மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் இங்கிருந்து மின் சாரம் பெறும் பகுதிகளான திருவெறும்பூர், மலைக் கோவில், பிரகாஷ்நகர், வேங்கூர், பாலாஜிநகர்ஒரு பகுதி, கூத்தைப்பார்,கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, மேலகுமரேசபுரம், சோழ மாதேவி, சோழமாநகர்,புதுத் தெரு, நவல்பட்டு, பர்மா காலனி, நேருநகர்,அண்ணா நகர், போலீஸ் காலனி, பூலாங்குடி, சூரியூர், கும்பக்குடி, பழங்கனாங்குடி, காந்தலூர், எம்.ஐ.இ.டி. குண்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதைப்போல் துவாக்குடி துணை மின்நிலையத்தில் நாளை 18-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பெல்டவுன்ஷிப்பில் சி-செக்டாரில் ஒரு பகுதி, மற்றும் ஏ, இ, ஆர், பிஹெச் செக்டர், ஏ.ஓ.எல். நேரு நகர், அண்ணா வளைவு, அக்பர்சாலை, எம்.டி.சாலை, அரசு பாலிடெக்னிக், தேசிய தொழில் நுட்ப கழகம், ராவுத்தன் மேடு, பெல்நகர், இந்திராநகர், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற் பேட்டை, பர்மாநகர், தேவ ராயநேரி, தேனீர்பட்டி, அசூர், பெய்கைக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×