என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணியில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
Byமாலை மலர்17 Jan 2020 11:15 AM GMT (Updated: 17 Jan 2020 11:15 AM GMT)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலின் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஆரணி:
ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் காந்தி ரோட்டில் பிரசித்தி பெற்ற அரியாத்தம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று மாட்டுப் பொங்கலையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் இரவு வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை- பணம் கொள்ளையக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவாஜிக்கு தகவல் தெரிவித்தார். அவர் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு ஆரணி டவுன் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பக்தர்கள் சார்பில் பிரார்த்தனைக்காக அம்மனுக்கு 8 பவுன் தாலிசரடு, 2 கிராம் அம்மன் பொட்டும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
மேலும் உண்டியலில் பக்தர்கள் ரூ.30 ஆயிரம் வரை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் காந்தி ரோட்டில் பிரசித்தி பெற்ற அரியாத்தம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று மாட்டுப் பொங்கலையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் இரவு வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை- பணம் கொள்ளையக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவாஜிக்கு தகவல் தெரிவித்தார். அவர் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு ஆரணி டவுன் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பக்தர்கள் சார்பில் பிரார்த்தனைக்காக அம்மனுக்கு 8 பவுன் தாலிசரடு, 2 கிராம் அம்மன் பொட்டும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
மேலும் உண்டியலில் பக்தர்கள் ரூ.30 ஆயிரம் வரை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X