search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குளத்தில் குதித்து வியாபாரி தற்கொலை

    கோவையில் குளத்தில் குதித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் குட்டன் (55). உழவர் சந்தையில் காய்கறி கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு உடல் நலக்குறைவு காணப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த குட்டன்குறிச்சி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குட்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×