search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடை
    X
    தடை

    காலாப்பட்டு பிரபல ரவுடிகள் 2 பேர் ஊருக்குள் நுழைய தடை

    காலாப்பட்டை சேர்ந்த 2 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேதராப்பட்டு:

    புதுவை பிள்ளைச் சாவடியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 30). பிரபல ரவுடியான இவர் காலாப்பட்டு ஜோசப் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.

    இந்த வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த சங்கர் கணேஷ் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இதற்கிடையே ஜோசப் கொலைக்கு பழிக்குப் பழியாக காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகரன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காலாப்பட்டு பகுதியில் தொடர்ந்து பதட்டநிலை இருப்பதால் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள சங்கர் கணேசால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என கருதி அவரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதனை ஏற்று 2 மாதம் ஊருக்குள் நுழைய சங்கர் கணேசுக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதேபோல் புதுவை சின்ன காலாப்பட்டு புது நகரை சேர்ந்தவர் கவுதமன் (24). ரவுடியான இவர் மீது கீழ்புத்துப்பட்டு மீனவர் வினோத் கொலை வழக்கு உள்ளது. இவரையும் 2 மாதம் ஊருக்குள் நுழைய கலெக்டர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×