என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சை அருகே போலி மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள மருங்குளத்தில் நேற்று வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மருங்குளம் நான்கு ரோடு பகுதியில் உள்ள வால்பட்டறை அருகே வாலிபர் ஒருவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் சோதனையில் வாலிபரிடம் இருந்து மூடி திறந்த நிலையில் 5 மது பாட்டில்களை கைப்பற்றினர்.
அதை போலீசார் நுகர்ந்து பார்த்த போது அதில் விஷத்தன்மை கலந்த வாடை வந்துள்ளது. விசாரணையில் பிடிபட்ட வாலிபர் மருங்குளம் நேரு தெருவை சேர்ந்த வைஜேந்திரன் என்பவரின் மகன் விஜய் (வயது 22) என்பதும் அவர் எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து வல்லம் போலீசார், விஜய் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 20 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மூடி திறந்த நிலையில் விஷதன்மையுடன் வாடை வந்த 5 மது பாட்டில்களை போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்