என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - 20 போலீசாரை கொல்ல சதித்திட்டம் என விசாரணை அதிகாரி ஸ்ரீநாத் தகவல்
Byமாலை மலர்16 Jan 2020 4:39 PM GMT (Updated: 16 Jan 2020 4:39 PM GMT)
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபீக்கிடம் நடந்த விசாரணையில், 20 போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை:
களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரிடம் காவல்துறை நடத்திய விசாரணை இன்று இரவு நிறைவு பெற்றது. இதனையடுத்து இருவரையும் குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளோம். கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை.
அப்துல் சமீம், தவுபீக்கிடம் நிறைய விசாரிக்க வேண்டியுள்ளது. கேள்விகளும் கேட்கப்பட வேண்டியுள்ளது. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இருவரும் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர். இருவருக்கும் எந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் விசாரிக்க வேண்டி உள்ளது என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, விசாரணை அதிகாரி ஸ்ரீநாத் கூறுகையில், விசாரணையில் 20 போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கைதான தீவிரவாதி அப்துல் சமீம் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூட்டாளிகளை கைது செய்ததால் காவல் துறையை பழிவாங்க பயங்கர திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X