என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வண்டலூர் பூங்காவில் ஓநாய் 7 குட்டி போட்டது
Byமாலை மலர்16 Jan 2020 10:17 AM GMT (Updated: 16 Jan 2020 10:17 AM GMT)
வண்டலூர் பூங்காவில் இந்திய பழுப்பு நிற ஓநாய் சிறந்த முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. சமீபத்தில் ஓநாய்கள் 4 ஆண் மற்றும் 3 பெண் குட்டிகளை என மொத்தம் 7 குட்டிகளை ஈன்றது.
சென்னை:
வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்ததொரு வன உயிரின இனப்பெருக்க மையமாகத்திகழ்கிறது. நிர்வாகத்தின் நல்ல வழிமுறைகள் மற்றும் சத்தான உணவுகள் அளிப்பதனால் பூங்காவில் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பூங்காவில் உள்ள இந்திய காட்டுமாடு ராகுல் மற்றும் ரீமா என்ற இணை சமீபத்தில் ஒருபெண் குட்டியை ஈன்றது. தற்சமயம் உயிரியல் பூங்காவில் 24 காட்டுமாடுகள் உள்ளன. இவை அருகருகே உள்ள இரு இருப்பிடங்களில் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசியாவின் பெரும் குளம்பினம் மற்றும் இந்திய கண்டத்தில் மட்டுமே காணப்படும் நீலமான் மிகச்சிறந்த முறையில் இங்கு இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
நீலமான் இணை சமீபத்தில் 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தற்சமயம் பூங்காவில் 11 நீலமான்கள் உள்ளன.
பூங்காவில் இந்திய பழுப்பு நிற ஓநாயும் சிறந்த முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. கீர்த்தி மற்றும் வசந்தன் இணை ஓநாய்கள் சமீபத்தில் 4 ஆண் மற்றும் 3 பெண் குட்டிகளை என மொத்தம் 7 குட்டிகளை ஈன்றது.
இந்த இணை இத்துடன் 3-வது முறையாக குட்டிகளை வெற்றிகரமாக ஈன்றுள்ளது. புதிதாக பிறந்துள்ள குட்டிகள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.
காணும் பொங்கல்நாளில் பலவிதமான சிறப்பு ஏற்பாடுகள் பார்வையாளர்களை மகிழ்விக்க பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் பிறந்த குட்டிகளை பெரிய எல்.இ.டி. திரையில் காட்சிபடுத்துதல் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்ததொரு வன உயிரின இனப்பெருக்க மையமாகத்திகழ்கிறது. நிர்வாகத்தின் நல்ல வழிமுறைகள் மற்றும் சத்தான உணவுகள் அளிப்பதனால் பூங்காவில் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பூங்காவில் உள்ள இந்திய காட்டுமாடு ராகுல் மற்றும் ரீமா என்ற இணை சமீபத்தில் ஒருபெண் குட்டியை ஈன்றது. தற்சமயம் உயிரியல் பூங்காவில் 24 காட்டுமாடுகள் உள்ளன. இவை அருகருகே உள்ள இரு இருப்பிடங்களில் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசியாவின் பெரும் குளம்பினம் மற்றும் இந்திய கண்டத்தில் மட்டுமே காணப்படும் நீலமான் மிகச்சிறந்த முறையில் இங்கு இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
நீலமான் இணை சமீபத்தில் 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தற்சமயம் பூங்காவில் 11 நீலமான்கள் உள்ளன.
பூங்காவில் இந்திய பழுப்பு நிற ஓநாயும் சிறந்த முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. கீர்த்தி மற்றும் வசந்தன் இணை ஓநாய்கள் சமீபத்தில் 4 ஆண் மற்றும் 3 பெண் குட்டிகளை என மொத்தம் 7 குட்டிகளை ஈன்றது.
இந்த இணை இத்துடன் 3-வது முறையாக குட்டிகளை வெற்றிகரமாக ஈன்றுள்ளது. புதிதாக பிறந்துள்ள குட்டிகள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.
காணும் பொங்கல்நாளில் பலவிதமான சிறப்பு ஏற்பாடுகள் பார்வையாளர்களை மகிழ்விக்க பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் பிறந்த குட்டிகளை பெரிய எல்.இ.டி. திரையில் காட்சிபடுத்துதல் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X