என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது
Byமாலை மலர்16 Jan 2020 2:39 AM GMT (Updated: 16 Jan 2020 2:39 AM GMT)
கூடங்குளம் முதலாவது அணுஉலையில் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் உள்ளன. இந்த 2 அணுஉலைகளிலும் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 15-ந்தேதி 2-வது அணுஉலையில் பராமரிப்பு பணிக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
முதலாவது அணுஉலையில் 900 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் திடீரென வால்வில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த அணுஉலையிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் வால்வில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
அந்த உணுஉலையில் தற்போது 410 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. படிப்படியாக மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, முழுதிறனான 1,000 மெகாவாட் மின்உற்பத்தி இலக்கை விரைவில் அடையும் என்று அணுமின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் உள்ளன. இந்த 2 அணுஉலைகளிலும் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 15-ந்தேதி 2-வது அணுஉலையில் பராமரிப்பு பணிக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
முதலாவது அணுஉலையில் 900 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் திடீரென வால்வில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த அணுஉலையிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் வால்வில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
அந்த உணுஉலையில் தற்போது 410 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. படிப்படியாக மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, முழுதிறனான 1,000 மெகாவாட் மின்உற்பத்தி இலக்கை விரைவில் அடையும் என்று அணுமின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X