search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தஞ்சை அருகே பெண் ஓட்டி வந்த கார் மோதியதில் டீ கடை உரிமையாளர் படுகாயம்

    தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் டீ கடை உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.
    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள மாப்பிள்ளை நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 53). இவர் மாப்பிள்ளை நாயக்கன் பட்டியில் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவதன்று இவர் மாப்பிள்ளை நாயக்கன் பட்டியில் இருந்து கேஸ் சிலிண்டர் வாங்குவதற்காக திருக்கானூர்ப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் தஞ்சை-புதுக்கோட்டை சாலை திருக்கானூர்ப்பட்டி நான்கு ரோடு அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வல்லம்-ஓரத்தநாடு சாலையில் குடும்பத்தினருடன் பெண் ஒருவர் ஓட்டிக்கொண்டு வந்த கார் கிருஷ்ணமூர்த்தியின் மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.

    இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து வல்லம் போலீசார் காரை ஓட்டி வந்த  பட்டுக்கோட்டை அருகே உள்ள விக்ரமத்தை சேர்ந்த கோபிநாத்தின் மனைவி அருணா(34) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×